தீபாவளியையொட்டி கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Update: 2023-11-13 05:51 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. நவம்பர் 11-ந்தேதி ரூ.221 கோடிக்கும் தீபாவளி தினமான நேற்று ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும், தீபாவளியன்று திருச்சி மண்டலத்திலும் அதிக அளவில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. நவம்பர் 11-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

மதுரை - ரூ.52.73 கோடி,

சென்னை - ரூ.48.12 கோடி

கோவை - ரூ.40.20 கோடி

திருச்சி - ரூ.40.02 கோடி-

சேலம் - ரூ.39.78 கோடி

நவம்பர் 12-ல் மண்டல வாரியாக நடைபெற்ற மது விற்பனை விவரம்:-

திருச்சி - ரூ.55.60

சென்னை - ரூ.52.98

மதுரை - ரூ.51.97 கோடி

சேலம் - ரூ.46.62 கோடி

கோவை - ரூ.39.61 கோடி

Tags:    

மேலும் செய்திகள்