டீக்கடையில் மதுவிற்றவர் கைது

பள்ளிபாளையம் அருகே டீக்கடையில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-13 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அருகே மொளசி ராக்கிய வலசு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் டீக்கடையில் மது விற்பனை செய்வதாக மொளசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது சரவணன் மறைத்து வைத்து மதுவிற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்