திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார், திசையன்விளை- உடன்குடி ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற திசையன்விளை மணலிவிளையைச் சேர்ந்த செந்தில் கணேஷை (வயது 45) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்கள், ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.