மது விற்றவர் கைது

நாகர்கோவிலில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-02 19:37 GMT

நாகா்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீசார் வெள்ளமண் ஓடை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாங்குநேரியை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 30) என்பதும், திருட்டுத்தனமாக மது விற்றதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்