மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-11 20:54 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் இடையார் கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமையனின் மகன் மணிவண்ணன்(வயது 35), வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து மணிவண்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்