அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் அருமநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் வீரவநல்லூரை சேர்ந்த சோபனதாஸ் (வயது 58) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.