மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2023-06-23 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸ் நேற்று துவரங்காடு சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற் கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது மது பாட்டில்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ஈசாந்திமங்கலம் மேலூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் (வயது55) என்பதும், மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்