லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-03 19:00 GMT

தென்திருப்பேரை:

குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் அம்மன்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மன்புரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் மேலப்புதுக்குடியை சேர்ந்த முருகேசன் (வயது 62) என்பதும், சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து முருகேசனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்