காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

Update: 2023-05-30 19:00 GMT

திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து பகுதியை சேர்ந்தவர் தாமஸ்ராஜ் (வயது 23). இவர் அப்பகுதியில் இறைச்சிக்கடை வைத்துள்ளார். இவரும், வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (19) என்பவரும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 பேரும் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையே தனலட்சுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தனலட்சுமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதல் ஜோடி நேற்று வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் தாமஸ்ராஜ், தனலட்சுமி மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்