மதுரை ஐகோர்ட்டில் வழக்கு முக்கிய ஆவணங்கள் மாயம் - நீதிமன்ற ஊழியர் உட்பட 3 பேர் கைது

முக்கிய ஆவணங்கள் மாயம் தொடர்பாக நீதிமன்ற ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-09-03 07:58 GMT

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் வழக்கின் ஆவணங்களை பாதுகாக்க கூடிய அறையில் இருந்து முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளன. இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் நீதிமன்ற ஊழியர் ஜான்சன், பாலமுருகன், பிரித்விராஜ் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்