கன்னியாகுமரியில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல்: 2 பேர் கைது
கன்னியாகுமரியில் 2 வாலிபர்கள், அனுமதியில்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பல நாட்களாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது.;
கன்னியாகுமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது கொடுத்து பணம் வசூல் செய்த முருகேஷ் (வயது 24) மற்றும் கணேஷ்(22) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அனுமதி இல்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்து பல நாட்களாக மோசடி செய்தது விசாரணையில் உறுதியானது. அவர்களிடம் போலி ரசீதுகள், வசூலித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீதும் மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.