மகரஜோதி தரிசனம்

ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடந்தது.;

Update:2023-01-15 00:15 IST

பனைக்குளம். 

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகரஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை 18-ம் ஆண்டு மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.

பிற்பகல் 5 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நிறைவு பெற்று ஸ்ரீவல்லபை மகரஜோதி தரிசன பூஜை நடைபெற்றது. சபரிவாசனின் அருளோடு ஸ்ரீபொன்னம்பல மேட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற அய்யப்பனின் பொக்கிஷத்திற்கு சிறப்பு பூஜை நடந்த பின்னர் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் ேகாவில் தலைமை குருக்கள் ஆர்.எஸ்.மோகன் சுவாமி செய்திருந்தார்..

Tags:    

மேலும் செய்திகள்