மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

மளிகை கடையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-04 19:30 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கடைத்தெருவில் பாலகணேசன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பக்கவாட்டில் உள்ள பிளைவுட் பலகை உடைந்து இருந்தது. மேலும் கல்லாப்பெட்டி திறந்து இருந்தது. அதில் இருந்து பணமும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அங்கு சென்று மளிகை கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் அந்த பகுதியில் உள்ள படத்தான் தோப்பு தெருவை சேர்ந்த குமார் மகன் அன்புஸ்ரீதர் (வயது23) என்பவர் கடையில் பணம் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்