லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் பெரியகுத்தகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் (வயது63) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.