சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் நவராத்திரி விழாவையொட்டி மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2023-10-19 23:00 GMT

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவின், 4-வது நாளான நேற்று சோழவந்தான் ஜெனகை மாரியம்மனுக்கு மரிக்கொழுந்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் தேங்காய் சாதம், பாசிப்பயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்