ம.தி.மு.க. இணையதள நிர்வாகிகள் கூட்டம்

சங்கரன்கோவிலில் ம.தி.மு.க. இணையதள நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

Update: 2023-07-03 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விருதுநகர், தென்காசி மண்டல ம.தி.மு.க. இணையதள நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. இணையதள அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். விருதுநகர், தென்காசி மண்டல பொறுப்பாளர் சங்கரசுப்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார் வரவேற்றார்.

ம.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, மணி, தென்காசி மாவட்ட ம.தி.மு.க. துணை செயலாளர் பொன். ஆனந்தராஜ், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ரமேஷ் (தென்காசி), ராஜகுரு (தூத்துக்குடி), ராம் விக்னேஷ் (நெல்லை) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் இணையதள பொறுப்பாளர்கள் ஹமீது, அருண்சங்கர், ராகவன், முருகராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்