கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் ஆண் பிணம்

Update: 2022-09-23 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழையபேட்டை பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து அவர் உடல் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்