பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகள் - அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

அமைச்சர் மூர்த்தி, தலைமையில் நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-02 16:54 GMT

சென்னை,

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமையில் இன்று (02.03.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின்போது பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகள் 7 நபர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்