பாப்பிரெட்டிப்பட்டி அருகே2 மகன்களுடன் பெண் மாயம்

Update: 2023-08-15 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நதியா (வயது 31). இவர்களுக்கு சபரிவாசன் (8), சித்தார்த் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த 13-ந் தேதி காலை நதியா மகன்களுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் குழந்தைகளுடன் அங்கு செல்லாமல் திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோவிந்த் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான நதியாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்