4 பவுன் நகை- ரூ.50 ஆயிரம் திருட்டு

அய்யம்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை- ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் வீட்டில் மிளகாய் பொடியை தூவி சென்றனர்.

Update: 2022-08-06 21:13 GMT

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை- ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் வீட்டில் மிளகாய் பொடியை தூவி சென்றனர்.

நகை- பணம் திருட்டு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ரெட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பவானி(வயது52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு காஞ்சீபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன் தினம் மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பினார். இவர் தனது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் அவர் வைத்திருந்த 4 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. மேலும் திருடர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி சென்றிருந்தனர்.

வழக்குப்பதிவு

இது குறித்து தகவலறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்