மோட்டார் சைக்கிள் திருட்டு
அருப்புக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை உஜ்ஜிசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 64). இவர் உஜ்ஜிசாமி கோவில் மெயின் தெருவில் தனியார் வாகன காப்பகத்தின் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு வருவதற்குள் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.