மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-03 17:33 GMT

ஆம்பூர்

ஆம்பூர் அருகே பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்தவர் அசாத்துல்லா. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரத்தில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை உமராபாத் போலீசார் தேவலாபுரம் பாலாற்று மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அது அசாத்துல்லாவின் மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது அதனை ஒட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் ஆம்பூர் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 23) என தெரியவந்தது இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்