நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி எம்.பி.

மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Update: 2023-08-20 11:09 GMT

நெல்லை,

நாங்குநேரியில் சமீபத்தில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது குறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சந்தித்து, உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தேன்.

குணமடைந்து வரும் அவர்கள் விரைவில் வீடு திரும்பி, தங்களது படிப்பை தொடர விழைகிறேன். நடந்த துயரச் சம்பவத்திலிருந்து, மனவலிமையோடு மீண்டுவரும் அக்குடும்பத்துடன் துணை நிற்பதாக உறுதியளித்தோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்