நாகை: பட்டினச்சேரி சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயை மே 31க்குள் அகற்ற முடிவு...

நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-03-16 10:26 GMT

நாகை,

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2ம் தேதி உடைந்து கடலில் கலந்தது.

இதனால், மீனவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. கச்ச எண்ணெய் குழாயை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே சிபிசிஎல் நிர்வாகத்தினர் உடைப்பை 3 முறை சரி செய்தனர். ஆனாலும் கச்சா எண்ணெய் மீண்டும் வெளியேறியது.

இந்த நிலையில், நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் 7 கிராம மீனவர்கள், சிபிசிஎல் நிர்வாகம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சேர்ந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் நாகூர் பகுதியில் போடப்பட்டுள்ள மே.31ம் தேதிக்குள் குழாயை முற்றிலும் அகற்ற ஒருமனதாக  முடிவுசெய்யப்பட்டு உள்ளது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்