தேசிய கல்வி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய கல்வி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-12-12 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளை தேசிய கல்வி தினமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர்முகம்மது, அப்ரோஸ் மற்றும் சேக்அப்துல்லா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்