தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

தக்கோலத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-25 18:57 GMT

தக்கோலத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பேரூராட்சி தலைவர் நாகராஜன் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் அரக்கோணம் தெற்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளர் யுவராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், லட்சுமி நாராயணன், நெடுஞ்செழியன், மணிவண்ணன், மோகன்ராஜ் உள்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்