நவராத்திரி விழா

ஆர்ய வைஸ்ய மகாசபா சார்பில் நவராத்திரி விழா வேடசந்தூரில் நடந்தது.

Update: 2022-09-27 16:35 GMT

ஆர்ய வைஸ்ய மகாசபா சார்பில், வேடசந்தூர் மார்க்கெட் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் 2-வது நாளான நேற்று முருகன், வள்ளி-தெய்வாணை சிலைகள் 3 அடி உயரத்தில் தயாரித்து அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த சிலைகளுக்கு, மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோல் பல்வேறு விதமான கொழு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்