பண்ருட்டி அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் சாவு

பண்ருட்டி அருகே ரெயிலில் அடிபட்டு மாணவன் உயிாிழந்தாா்.

Update: 2022-10-14 18:45 GMT

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புக்குமரன். இவருடைய மகன் பர்தீன் (வயது 13). இவன் புதுப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு பர்தீன் இயற்கை உபாதை கழிப்பதற்காக பனப்பாக்கம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தான். அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் எதிர்பாராதவிதமாக பர்தீன் மீது மோதியது. இதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த தகவல் அறிந்த கடலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவன் பர்தீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்