விளாத்திகுளம் அருகேஅரியவகை விஷப்பாம்பு பிடிபட்டது

விளாத்திகுளம் அருகே அரியவகை விஷப்பாம்பு பிடிபட்டது;

Update:2023-09-28 00:15 IST

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவில் சுமார் 2 அடி நீள மெல்லியதான பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றது. உடனே அப்பகுதியைச் சேர்ந்த பாம்பு ஆர்வலர்கள், அதனை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பாவுக்குள் போட்டு வைத்து கொண்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே வனத்துறையினர் வந்து, அந்த பாம்பை வாங்கி சென்றனர். அது, கொடிய விஷம் கொண்ட நாணல்குச்சி வகை பவளப்பாம்பு என்றும், மலைப்பகுதியில் உள்ள மரக்கட்டைகளில் புகுந்து இருக்கும், மரக்கட்டைகளை ஏற்றி சென்ற லாரியில் இருந்து தவறி சாலையில் விழுந்திருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அதனை நாகலாபுரம் பேராக்குடி வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்