கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு 4 நாள் சிபிஐ காவல்

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு 4 நாட்கள் சிபிஐ கடுங்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-19 11:49 GMT

சென்னை,

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கணக்கு தணிக்கையாளர் (ஆடிட்டர்) பாஸ்கர் ராமனை சிபிஐ நேற்று கைது செய்தது. கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர ராமனின் வீடு, அலுவலகங்களில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டு, டெல்லி கொண்டு செல்லப்பட்டார். விசா மோசடி வழக்கில் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு 4 நாட்கள் சிபிஐ கடுங்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்