இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்

இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-10-15 00:05 IST

பனப்பாக்கம் அருகே உள்ள துறையூர், உளியநல்லூர், சிறுவளையம், பொய்கைநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் வேலை முடிந்து திரும்பும்போது கம்பெனி பஸ்சில் இருந்து இறங்கி நள்ளிரவு 12 மணியளவில் பனப்பாக்கத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இரண்டு தொழிலாளர்கள் பனப்பாக்கத்திலிருந்து துறையூர் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து அவர்களிடமிருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று வழிப்பறி நடந்த துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்