உதவி கலெக்டர் அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-31 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமையை கண்டித்து அம்பேத்கர், பெரியார்-மார்க்சிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ் தலைமை தாங்கினார். இதில் ஜெய்பீம் தொழிலாளர் நலச்சங்க நிறுவனர் ஆ.செண்பகராஜ், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட துணை தலைவர் சூ.பீமாராவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்