முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

பேய்க்குளம் அருகே முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-04 19:00 GMT

தட்டார்மடம்:

பேய்குளம் அருகே உள்ள செங்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 69). தொழிலாளியான இவர் தனது மனைவி ராஜேஸ்வரியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் தோட்டத்தில் புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெருமாள் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்