கார் மோதி முதியவர் சாவு

மானூர் அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.

Update: 2022-12-14 19:34 GMT

மானூர்:

தாழையூத்து அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்தவர் நயினார் (வயது 55). இவர் தனது உறவினரான மேக்கரையைச் சேர்ந்த முருகன் (60) என்பவருடன், மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரில் உறவினரின் திருமணத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் இருவரும் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். நெல்லை - சங்கரன்கோவில் மெயின் ரோட்டை கடந்த போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நயினார் இறந்தார். இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்