திராவகம் குடித்த முதியவர் சாவு

திராவகம் குடித்த முதியவர் பரி்தாபமாக இறந்தார்.

Update: 2022-07-22 18:29 GMT

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து ராமசாமி சம்பவத்தன்று வீட்டில் திராவகம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்