குளத்தில் பிணமாக மிதந்த முதியவர்

பாவூர்சத்திரம் அருகே குளத்தில் முதியவர் பிணமாக மிதந்தார்.

Update: 2023-05-18 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூரில் வசித்து வந்தவர் செல்லையா (வயது 80). விவசாய கூலி தொழிலாளியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊர் அருகே உள்ள பெரிய குளத்திற்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று அந்த குளத்தில் செல்லையா பிணமாக மிதந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். செல்லையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்