மாடு முட்டி முதியவர் பலி

மேய்ச்சலுக்கு சென்ற போது மாடு முட்டி முதியவர் பலியானார்.;

Update:2022-08-03 22:08 IST

நெகமம், 

நெகமம் அடுத்த ரங்கம்புதூர் அரிஜன காலனியை சேர்ந்தவர் கிட்டான் (வயது 82). இவர் கடந்த 31-ந் தேதி சின்னேரிபாளையத்தில் உள்ள தனது மகன் மாரிமுத்து வீட்டிற்கு சென்றார். அங்கு கிட்டான் ஒரு மாட்டை மேய்ப்பதற்காக அழைத்து சென்று உள்ளார். அப்போது மாடு கிட்டானை முட்டி தூக்கி வீசியது. உடனே அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த கிட்டானை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கிட்டான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்