மொபட்-மோட்டார் சைக்கிள் மோதலில் முதியவர் பலி

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதலில் முதியவர் பலியானார்.

Update: 2023-08-26 13:39 GMT

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதலில் முதியவர் பலியானார்.

வேலூர் பலவன்சாத்துகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 64). இவர் நேற்று முன்தினம் மொபட்டில் மேட்டுஇடையம்பட்டிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பாகாயம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அடுக்கம்பாறையை நோக்கி சென்ற விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காளிதாஸ் லேசான காயம் அடைந்தார்.

இதைக்கண்ட பொதுமக்கள் சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவிக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்