காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

தளி அருகே காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-01-13 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தளி அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்தப்பா (வயது 75). விவசாயி. இவர் நேற்று காலை பாசப்பள்ளி சாலையில் நடந்து சென்றபோது அங்கிருந்த தோப்பில் இருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரை விரட்டி சென்று தாக்கியது. இதில் முதியவர் குடல் சரிந்து படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் முதியவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்