மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-02 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்திநகர் 1-ம் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஈஸ்வரி (வயது 75). இவர் நேற்று முன்தினம் காலை சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ஈஸ்வரி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்