கார் மோதி மூதாட்டி பலி

வாசுதேவநல்லூரில் கார் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-09-07 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் ராமையா தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 77). சம்பவத்தன்று ராமலட்சுமி வாசுதேவநல்லூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ராமலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் வாசுதேவநல்லூர் சேனையர் பள்ளி தெருவைச் சேர்ந்த முருகன் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்