கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2023-01-17 20:33 GMT

திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ராஜாபட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(வயது 85). இவர் நேற்று காலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மினிக்கியூர் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார், அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வெள்ளையம்மாளை அக்கம், பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெள்ளையம்மாளின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்