ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

சங்கரன்கோவிலில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-17 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி ரெயில்வே கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்