பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.

Update: 2022-09-17 18:45 GMT

தமிழக அரசின் உத்தரவின்படி தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழா நேற்று சமூக நீதி நாளாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது.இதை ெயாட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியாரின் சிலைக்கு திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில், அந்த அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், ம.தி.மு.க. மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதேபோல் லோக் ஜனசக்தி கட்சி, தமிழ் புலிகள் கட்சியினரும், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்