விழுப்புரம் காட்பாடி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து

2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம் காட்பாடி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து

Update: 2022-05-23 17:57 GMT

விழுப்புரம்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்கனவே நிறுத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம்- காட்பாடி பயணிகள் ரெயிலை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்க தென்னக ரெயில்வே அனுமதியளித்துள்ளது. அதன்படி இந்த ரெயில் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை காலை 9.10 மணிக்கு வந்தடைந்தது.

இதேபோல் மறுமார்க்கத்தில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.05 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, துறிஞ்சாபுரம், அகரம்சிப்பந்தி, போளூர், மாதிரிமங்கலம், ஆரணி சாலை, சேதராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், கணியம்பாடி, பெண்ணாத்தூர், வேலூர் கண்டோன்மெண்ட், வேலூர் டவுன் வழியாக காட்பாடி ரெயில் நிலையத்தை இரவு 11.05 மணிக்கு சென்றடைந்தது. இம்மார்க்கத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்