மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

Update: 2023-01-10 18:45 GMT

விழுப்புரம்

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1,500-ஆக இம்மாதம் 1-ந் முதல் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்