மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 103 மனுக்கள் பெறப்பட்டன;

Update:2022-09-05 23:36 IST
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 103 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதில் உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்