புகைப்பட கண்காட்சி

பேட்டை கல்லூரியில் புகைப்பட கண்காட்சி நடந்தது.

Update: 2023-09-29 19:52 GMT

பேட்டை:

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் இளங்கலை இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் மாணவியர் நடத்திய "இதழ் ஒளி - 2023 " புகைப்படக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவியர் எடுத்த 138 புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி முதல்வர் மைதிலி கண்காட்சியை திறந்து வைத்தார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில் மூன்றாமாண்டு மாணவி மற்றும் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் மன்றச் செயலாளர் கவிதா, துறை தலைவர் மோனிக்கா, கவுரவ விரிவுரையாளர்கள் மாரியம்மாள், அன்பரசி, சங்கரம்மாள் மற்றும் மாணவியர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்