ஆயுதப்படை போலீஸ்காரர் திடீர் சாவு

ஆயுதப்படை போலீஸ்காரர் திடீர் சாவு உயிரிழந்தார்.

Update: 2023-03-28 18:45 GMT

அவனியாபுரம், 

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜபாண்டி(வயது 36). இவருடைய மனைவி கண்மணி(30). இவர்களுக்கு சமர்(6), சத்ருகன்(4) என 2 குழந்தைகள் உள்ளனர். ராஜபாண்டி மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். ராஜபாண்டியின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த எழுவனூர் ஆகும். கடந்த சில நாட்களாக அவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் வர்ம ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மூட்டு வலிக்காக ராஜபாண்டிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி இறந்தார். இது குறித்து ராஜபாண்டியின் மனைவி கண்மணி அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவனியாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்