பகவதியம்மன் கோவிலில் பொங்கல் விழா

பகவதியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2022-05-31 18:50 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடந்தது. அதனை தொடர்ந்து கிடாய் வெட்டு பூஜை, பொங்கல் விழா நேற்று நடந்தது. முன்னதாக பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வாசலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்